குடிநீர் வழிந்தோடியதில் தாகம் தீர்க்கும் காட்டெருமை

77பார்த்தது
கொடைக்கானல் மூஞ்சிகள் பகுதியில் சாலையில் குடிநீர் வழிந்தோடியதில் தாகம் தீர்த்த காட்டெருமை.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப் பகுதியான மூஞ்சிகல் பகுதியில் புதன்கிழமை காலை 7: 30 மணியளவில் நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குடிநீர் வழிந்தோடியதை அவ்வலியாக வந்த பெரிய காட்டெருமை தாகம் தீர குடிநீரை அருந்தி மகிழ்ந்தது.

அந்த பெரிய காட்டெருமை தந்திமேடு பகுதியில் இருந்து ஆனந்தகிரி பகுதி வழியாக மூஞ்சிக்கல் பகுதிக்கு வந்தது.

காட்டருமையை கண்ட பொதுமக்கள் ஓடி ஒதுங்கி நின்றனர் சிலர் துணிச்சலாக அதன் அருகே சென்று வீடியோ எடுத்தனர்.

வனப்பகுதியில் வசிக்க வேண்டிய கட்டெருமை கொடைக்கானல் நகரில் உள்ள அனைத்து வீதிகளிலும் நடமாடத் தொடங்கிவிட்டது. இது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள நிலையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி