
தர்மபுரி: நாளை மதுபான கடைகள் மூடல்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) மகாவீர் ஜெயந்தி தினத்தையொட்டி, மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படை வீரர் மதுவிற்பனை கூடங்கள் அனைத்தும், இன்று (9ம் தேதி) இரவு 10 மணி முதல் 11ம் தேதி காலை 12 மணி வரை, மதுபானங்கள் விற்பனை இன்றி, மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.