தருமபுரி குமாரசாமிப் பேட்டை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை பெருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கொடியேற்றும் நிகழ்ச்சியில் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ அம்பாள் யாக பூஜைகள் நடைபெற்றது. இரவு பம்பை வாதியம் முழங்க வான வேடிக்கையுடன் கொடியேற்றும் நிகழ்ச்சியும் சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து
சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபா ஆராதனையை தொடர்ந்து ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் வெள்ளி கவச சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று காலை சக்தி கரகம் அழைக்கும் நிகழ்ச்சியும் பின்னர் கரகத்துடன் ஊர்வலமாக வந்து தயாராக இருந்த தீ குண்டத்திற்கு ஆடு பலியிட்டு பூஜை செய்த பின்னர் அருள் வாக்கு கூறி பூசாரி சக்தி கரகத்துடன் தீகுண்டத்தில் இறங்கினார். இதனை தொடர்ந்து பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பொதுமக்கள் தீ குண்டத்தில் உப்பு மிளகு இட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் கோயிலின் முன்பு நினைத்த காரியம் நிறைவேற வேண்டி பெரியவர் முதல் சிறியவர் வரை தரையில் படுத்து கொண்டனர் அவர்கள் மீது கரகம் எடுத்து வந்த பூசாரி அவர்கள் மீது ஏறி ஏரி சென்றனர். பின்னர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையும் ஆராதனையும் நடைபெற்றது.