தர்மபுரி: அண்ணாவின் கையில் தொங்கிய மர்ம பை

3300பார்த்தது
தர்மபுரி: அண்ணாவின் கையில் தொங்கிய மர்ம பை
தர்மபுரி நான்குரோடுரவுண்டானா அருகே, அண்ணா சிலை உள்ளது. இந்த சிலையில், அண்ணாவின் கையில் புளுகலர் துணி பை ஒன்று தொங்கியபடி இருந்தது. தகவலை அடுத்து தர்மபுரி டவுன் போலீசார் சிலை யின் அருகே சென்று அண் ணாவின் கையில் தொங்கிய மர்ம பையை அகற்றினர். பின்னர் அந்த பையை பார்த்தபோது, உள்ளே ஒயரும், பழுதான டிரான்ஸ்மீட்டரும் இருப்பது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்தனர்.

பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த பையை தொங்கவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் தர்மபுரி நான்கு ரோட்டில் அண்ணா சிலையின் கையில் பையை தொங்கவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி