பழனியில் பக்தர்கள் அவதி

51பார்த்தது
பழனியில் பக்தர்கள் அவதி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கணக்கன்பட்டி பகுதியில் சற்குரு மூட்டை சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. தை அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பழனியில் இருந்து அதிகப்படியான பக்தர்கள் சற்குரு கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று தை அமாவாசை என்பதால் போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. பக்தர்கள் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இன்னும் இரண்டு வாரத்தில் பௌர்ணமி நாள் வரும் என்பதால் அச்சமயத்திலும் இதே நிலை நீடிக்கக்கூடாது என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி