ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆர்வலரான கிளாரா ஜெட்கின், என்பவர் 1910 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நிறுவினார். பெண்களின் உரிமைகள், சம ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமைகளுக்காக அவர் போராடினார். பாலின சமத்துவத்தை கோருவதற்காக மார்ச் 8ஆம் தேதியை அவர் முன்மொழிந்தார். முதல் மகளிர் தினம் 1911ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. இன்று, பெண்களின் சாதனைகளையும் சம உரிமைகளுக்கான அவர்களின் போராட்டத்தையும் கௌரவிக்கும் வகையில் உலகம் முழுவதும் ‘மகளிர் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.