புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது

1024பார்த்தது
புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் தலைமையிலான காவல் துறையினர் கண்டரக்கோட்டை ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருவதிகை பழைய கடலூர் மெயின் ரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் என்பதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி