பண்ருட்டியில் தொழிலாளி வழுக்கி விழுந்து உயிரிழப்பு

60பார்த்தது
பண்ருட்டியில் தொழிலாளி வழுக்கி விழுந்து உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த முகிலரசன் தொழிலாளி இவரது மனைவி வனிதா இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி முகிலரசன் வீட்டில் குளித்து கொண்டிருந்த போது திடீரென வழுக்கி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகிலரசன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் பண்ருட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி