இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் சமூக வலைதளம் மூலம் கடலூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் 100% வாக்கினை பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இன்று பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.