கடலூர் மாவட்டம், சிதம்பரம் பைபாஸ் சாலையில் நேற்று முன்தினம் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தமிழ்செல்வி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அந்த வழியாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வந்தார். அவரது காரையும் நிறுத்தி காவல் துறையினர் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்பு அமைச்சர் புறப்பட்டு சென்றார்.