காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி தற்கொலை

6260பார்த்தது
காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி தற்கொலை
தெலுங்கானா மாநிலம் சொப்பதண்டி தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ மெடிபள்ளி சத்யத்தின் மனைவி ரூபாதேவி தற்கொலை செய்து கொண்டார். அல்வாலில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரூபா தேவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, நேற்று வியாழக்கிழமை இரவு குடும்பத்தினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ரூபாதேவி ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே சில காலமாக கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி