சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் உணவகமான KFC-ல் பரீத் என்பவர் தனது மகனுடன் சாப்பிட சென்ற போது, சிக்கனில் இருந்த முடி தனது மகனின் பற்களில் சிக்கியதாக கூறியுள்ளார். இது குறித்து கேட்ட போது உணவக நிர்வாகத்தினர் முறையாக பதில் கூறவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள பரீத் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.