முடிவுக்கு வந்த பனிப் போர்: தந்தையை சந்தித்து பேசிய விஜய்

8744பார்த்தது
முடிவுக்கு வந்த பனிப் போர்: தந்தையை சந்தித்து பேசிய விஜய்
நடிகர் விஜய்க்கும், அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கும் சில ஆண்டு காலமாக நிலவி வந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது தந்தையை சந்தித்து விஜய் பேசியுள்ள புகைப்படத்தை விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக சில ஆண்டுகளாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் முரண்பாடுகள் இருந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் விஜய் தனது தந்தை மற்றும் தாயை இன்று (மே 27) நேரில் சந்தித்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி