கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி பத்மாவதி(70). இவர் நேற்று முன்தினம் இரவு குப்பை கொட்ட வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பத்மாவதி இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.