கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் ஈச்சனாரி இரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த 250 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உடனுக்குடன் நியமன ஆணை வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2642388 என்னை தொடர்பு கொள்ளலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.