கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும்

1575பார்த்தது
கோயம்புத்தூரில் இந்திய ஒற்றுமை இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர். டென்னிஸ் கோவில் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்திய ஜனநாயக கடமையான வாக்களிப்பது மிக முக்கியமானதாகும். அதனை அனைவரும் சரிவர செய்ய வேண்டும்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவை மாவட்டம் பெரிய நகரமாக உள்ளது. அதில் விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் சேவை திட்டம், சிறுவாணி தண்ணீர் பிரச்சனை போன்றவற்றை தமிழ்நாடு அரசு கவனம் செலுத்து சரிசெய்ய வேண்டும்.

அதே சமயம் மருத்துவத்துறையில் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான வரிகளை குறைக்க வேண்டும். மருத்துவத் துறையில் முன்னோடியாக இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் விரைந்து முடித்தும், கோவைக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் கோவைக்கு பல முக்கிய தேவை உள்ளது. ஆட்சியில் இனி வரும் புதிய பிரதமார்கள் கோவைக்கு அனைத்து தேவைகளையும் செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி