தியாகராய நகர் - Thiyagarayanagar

சென்னை: வன உரிமை சட்டம்.. தமிழக அரசு மீது பெ.சண்முகம் குற்றச்சாட்டு

சென்னை: வன உரிமை சட்டம்.. தமிழக அரசு மீது பெ.சண்முகம் குற்றச்சாட்டு

மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துவதால், பட்டா பெற முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் குற்றம் சாட்டினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், நில உரிமையும், பழங்குடி மக்களின் இனச்சான்று, இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கிடக் கோரி, ஆர்ப்பாட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பி. டில்லி பாபு தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ஆர். தமிழரசன், துணை செயலாளர் எம். அழகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், வன உரிமைச் சட்டத்தின் கீழ், இதுவரை 15, 442 மலைவாழ் குடும்பங்களுக்கு மட்டுமே வனஉரிமை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம் கொண்டு வரப்பட்டு 17 ஆண்டுகள் ஆகிறது. இச்சட்டத்தைக் கண்காணிக்க தமிழக அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு உள்ளது. ஆனால், இக்குழு இதுவரை கூட்டப்படவில்லை. இதனால், இச்சட்டம் ஆமை வேகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தால் பயன்பெறும் அனைத்துக் குடும்பங்களுக்கும் தமிழக அரசு பட்டா வழங்க வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

வீடியோஸ்


சென்னை