மைலாப்பூர் - Mylapore

சென்னை: தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை பிறப்பிக்க கோரி வழக்கு

சென்னை: தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை பிறப்பிக்க கோரி வழக்கு

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை பிறப்பிக்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில் வரும் ஏப். 4-ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளரான விஜயராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக் கோரி ஒவ்வொரு முறையும் மனுதாரர்கள் விண்ணப்பிக்க நேரிடுவது வேதனைக்குரியது என கோரியிருந்தார்.  இந்த மனு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவை தமிழில் நடத்தக் கோரி ஏற்கெனவே சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, மருதமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் தொடர்பாக ஏற்கெனவே தொடரப்பட்டுள்ள வழக்குடன் இந்த வழக்கையும் நாளைக்கு சேர்த்து பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

வீடியோஸ்


சென்னை
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: ராமதாஸ் வலியுறுத்தல்
Mar 27, 2025, 15:03 IST/துறைமுகம்
துறைமுகம்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: ராமதாஸ் வலியுறுத்தல்

Mar 27, 2025, 15:03 IST
ஆன்லைன் சூதாட்டத்தால் 86 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தடை பெற முடியாவிட்டால் உடனடியாக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் செந்துறை குரும்பம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற பால் வணிகர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  மகேந்திரனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகேந்திரனையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 86ஆக அதிகரித்திருக்கிறது. திமுக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்குக் கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.