நீட் தேர்வில் மோசடி - உளவுத்துறை ரகசிய விசாரணை

55பார்த்தது
நீட் தேர்வில் மோசடி - உளவுத்துறை ரகசிய விசாரணை
நீட் தேர்வில் மோசடி செய்த நபர் குறித்து உளவுப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்த டாக்டர் ஒருவர் கடந்த ஆண்டு மருத்துவ முதுநிலை மேற்படிப்பிற்காக போலியான ஆவணங்களை தயாரித்து கடந்த மார்ச் மாதம் மதுரையில் தேர்வு எழுதினார். அதில் அவர் மருத்துவ மேற்படிப்பிற்கு தகுதியான மதிப்பெண்களை பெற்றார். தொடர்ந்து புனேவில் உள்ள மருத்துவ கல்லுாரியில் எம்.டி., படிப்பதற்காக விண்ணப்பித்து கட்டணம் செலுத்தினார். அதன் பின் அவர் மருத்துவ மேற்படிப்பில் சேரவில்லை. இதனால் மருத்துவ கவுன்சிலுக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் உளவுப்பிரிவு போலீசார் மூலமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி