சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அடித்தளம் - ராகுல் காந்தி

74பார்த்தது
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அடித்தளம் - ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அடித்தளம் என உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற சம்விதன் சம்மான் சம்மேளன் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். இந்தியாவில் 90% மக்கள் அரசு அமைப்புகளில் அங்கமாக இல்லை. அந்த மக்களுக்கு போதுமான ஆற்றல், திறமை இருந்தும் அரசு அமைப்புகளுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி