கங்குவா படத்திற்கு தடை கோரிய வழக்கு.. நாளை முக்கிய உத்தரவு

78பார்த்தது
கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரிய வழக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ.55 கோடி பணம் நாளை வழங்கப்படும் என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. இதனால், வழக்கின் விசாரணையை நாளைக்கு (நவ.8) ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார். பல திரைப்பட தயாரிப்புக்கு வாங்கிய ரூ.99.22 கோடியில் மீதமுள்ள ரூ.55 கோடியை திரும்ப வழங்காததால், கங்குவா படம் வெளியிட தடை விதிக்க ரிலையன்ஸ் நிறுவனம் மனுதாக்கல் செய்தது.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி