நயன்தாரா மீது வழக்குப்பதிவு.. பரபரப்பு

1537பார்த்தது
நயன்தாரா மீது வழக்குப்பதிவு.. பரபரப்பு
நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படமான 'அன்னபூரணி' தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் லவ் ஜிஹாதை ஊக்குவிக்கும் வகையிலான காட்சிகள் இருப்பதாகவும், மேலும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஷிவசேனா தலைவர் ரமேஷ் சொலான்கி மும்பை காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். மேலும் ஒரு அர்ச்சகரின் பெண்ணான கதாநாயகி நமாஸ் செய்கிறார். எனவே படத்தின் இயக்குனர், நயன்தாரா, ஜெய் ஆகியோர் மீதும், படத்தை நெட்பிளிக்ஸ், ஜீபைவ் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி