நாளை உருவாகிறது 'ரீமால்' புயல்

1053பார்த்தது
நாளை உருவாகிறது 'ரீமால்' புயல்
வங்கக்கடலில் நாளை (மே 25) 'ரீமால் புயல்' உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது மே 26ஆம் தேதி மாலை தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. ஓமன் நாடு பரிந்துரைப்படி புயலுக்கு 'ரீமால்' என பெயர் சூட்டப்பட்டது. வருகிற 26ஆம் தேதி 'ரீமால் புயல்'
மேற்குவங்க பகுதியில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல், நாளைய தினம் தென் வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி