கார் விபத்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

71பார்த்தது
கார் விபத்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை, ஈசிஆரில் கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் நேற்று (மே 14) அதிவேகமாக வந்த கார், குறுக்கே வந்த மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது. மாடு மீது மோதி, பின் மரத்தில் கார் மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. புதுச்சேரிக்கு சென்று திரும்பிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி