சைதை துரைசாமி மகன் மறைவு.. இபிஎஸ் உருக்கம்

100839பார்த்தது
சைதை துரைசாமி மகன் மறைவு.. இபிஎஸ் உருக்கம்
முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் காரில் சென்றுகொண்டிருந்தபோது நடந்த விபத்தில் கார் கவிழ்ந்து சட்லஜ் நதியில் விழுந்தது. இதனையடுத்து கடந்த 8 நாட்களாக தேடப்பட்டுவந்த அவரது உடல் தற்போது கிடைத்துள்ளது. இந்நிலையில் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். தனது மகனை இழந்து வாடும் சைதை துரைசாமியின் துயரில் நானும் பங்கேற்கிறேன் என அவர் கூறியுள்ளார். வெற்றி துரைசாமியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி