BREAKING: சி.வி.சண்முகத்துக்கு எதிரான 2 வழக்குகள் ரத்து!

51691பார்த்தது
BREAKING: சி.வி.சண்முகத்துக்கு எதிரான 2 வழக்குகள் ரத்து!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரான 2 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சி.வி.சண்முகம் மீது தொடரப்பட்ட 2 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் மது விற்பனை, கஞ்சா புழக்கம் தொடர்பாக சி.வி.சண்முகம், தமிழக அரசையும், முதலமைச்சரையும் விமர்சித்துப் பேசியிருந்தார். இதனால், தமிழக அரசின் சார்பில் 4 அவதூறு வழக்குகள் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த 4 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதில், சி.வி.சண்முகம் மீதான இரண்டு அவதூறு வழக்குகளை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மேலும் இரண்டு வழக்குகளை ரத்து செய்ய மறுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி