அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவை, தரக்குறைவாக விமர்சித்த, பொள்ளாச்சி
திமுக நிர்வாகியை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்பிய பொள்ளாச்சி நகர
பாஜக நிர்வாகிகளை அரசு கைது செய்திருக்கிறது. பொதுமக்களின் அடிப்படை உரிமையான வழிபாடு உரிமைகளையும், இந்து மத நம்பிக்கையையும் புண்படுத்திய திமுகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் தவறைத் தட்டிக் கேட்ட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தமிழக
பாஜக தலைவர்
அண்ணாமலை எக்ஸில் பதிவிட்டுள்ளார்.