நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் கடந்த 7ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், போபால் மாவட்ட
பாஜக நிர்வாகி ஒருவர் தனது மகனை வாக்குச் சாவடிக்கு அழைத்த
ுச் சென்று 'தாமரை' சின்னத்திற்கு வாக்களிக்கச் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.