வேகத்தடையால் ஏற்பட்ட விபத்து - இளைஞர் பலியான சிசிடிவி

73பார்த்தது
தென்காசி மாவட்டம் இளஞ்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆனந்த் ஆறுமுகம் என்பவர் கடந்த 7ஆம் தேதி இரவு குற்றாலம் நோக்கி தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்தார். அப்போது, வேகத்தடை மீது வேகத்தை குறைக்காமல் சென்றதால் நிலைதடுமாறி இருசக்கர வாகனம் விழுந்தது. இந்த விபத்தில் அந்த இளைஞர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி