"பாஜக ஆர்சிபி மாதிரி தோத்துக்கிட்டே இருக்கும்.!" ஜெயக்குமார்

566பார்த்தது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று (ஜூன் 7) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐபிஎல்-ல் பெங்களூர் அணி எப்படி தோல்வியை தழுவிக் கொண்டே இருக்குமோ, அதுபோல தமிழகத்தில் பாஜக என்றைக்கும் தோற்றுக் கொண்டே இருக்கும். நாங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாதிரி தோற்றாலும் ஒருநாள் மீண்டும் ஜெயித்து வருவோம். சாதியவாத, மதவாத அரசியலை விட்டு விட்டு இளைஞர்களுக்கு என்ன தேவை? நாட்டிற்கு என்ன தேவை? என்பதை அண்ணாமலையும், பாஜகவும் பார்க்க வேண்டும் என அவர் கூறினார்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி