பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ

83பார்த்தது
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ
2024-ம் ஆண்டு பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு பாஜக எம்எல்ஏ ஸ்ரேயாசி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பீகாரில் உள்ள ஜமுய் தொகுதி எம்.எல்.ஏ. முன்னதாக காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பதக்கம் வென்ற ஸ்ரேயாசி, முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்காக பொதுமக்கள் பிரார்த்தனை செய்யுமாறு ஸ்ரேயாசி வேண்டுகோள் விடுத்தார். இவர், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங்கின் மகள் ஆவார்.

தொடர்புடைய செய்தி