முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது

80பார்த்தது
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது
முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வராகவும் இருந்த நரசிம்ம ராவ் இந்தியாவின் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 1991 முதல் 1996 வரை பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலை முன்னறிவித்த நபராக அறியப்படுகிறார். ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும், நரசிம்ம ராவ் பல்வேறு பதவிகளில் இந்தியாவுக்குச் சேவை செய்துள்ளார். அவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதில் பெருமை கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி