முன்னாள் பிரதமர் சரண் சிங்-க்கு பாரத ரத்னா விருது

51பார்த்தது
முன்னாள் பிரதமர் சரண் சிங்-க்கு பாரத ரத்னா விருது
இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடிய சரண் சிங், 1979 இல் சிறிது காலம் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நாட்டின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்படுவது நமது அரசின் அதிர்ஷ்டம். இந்த கவுரவம் நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர். உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, எம்எல்ஏவாக இருந்தாலும், தேசத்தைக் கட்டியெழுப்ப அவர் எப்போதும் உத்வேகம் அளித்தார். எமர்ஜென்சிக்கு எதிராகவும் உறுதியாக நின்றார்" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி