ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு பாரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மதுக்கடை மூடப்பட்ட பிறகு ஐந்து பேர் வந்து மது கேட்டுள்ளனர். அதற்கு பார் ஊழியர்கள் மறுத்த நிலையில் 5 பேரும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து பாரின் டிஜே சந்தீப்பை சுட்டுள்ளார். படுகாயமடைந்த சந்தீப்பை பார் ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.