செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39-வது முறையாக நீட்டிப்பு

83பார்த்தது
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39-வது முறையாக நீட்டிப்பு
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 39 வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014ல் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் அவருக்கு 1 ஆண்டாக ஜாமீன் கிடைக்கவில்லை. ஏற்கனவே ஐந்து முறை ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 39வது முறையாக அவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி