திமுக கூட்டணிக்கு ஆதரவு: தமிழர் நீதிக் கட்சி தலைவர் பேட்டி

4641பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள தமிழர் நீதிக் கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அக்கட்சியின் தலைவர் சுபா. இளவரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்:

தமிழகத்தை பொறுத்த அளவில் பாசிச பாரதிய ஜனதா கட்சி ஒன்றே சாமானிய மக்களின் ஒரே எதிரி என்கிற நிலைப்பாட்டில் நாங்கள் இருப்பதால் புதுச்சேரி உட்பட தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு தீவிரமாக ஆதரவளித்து தேர்தல் பணியாற்றுவது என்கிற முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் தொகுதி மக்களுக்கு தேவையான விஷயங்களை எம்பி என்கிற நிலையில் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்தில் தேசிய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் சக்தி மிகுந்த ஒரே தலைவராக திருமாவளவன் இருப்பதால் அவருக்கு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திறந்த மனதுடன் ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி