மாணவியை மிரட்டி பணம், நகை பறிப்பு: போக்சோவில் வாலிபர் கைது

10058பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்த அஜய் என்பவர், பள்ளி மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு மாணவி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அஜய், ஒரு கட்டத்தில் மாணவியின் போட்டோவை வைத்துக் கொண்டு, காதலிக்க மறுத்தால் போட்டோவை இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அசிங்கப்படுத்துவேன் என மிரட்டி, அவரிடம் ரூ. 1.50 லட்சம் ரொக்க பணம், 2 பவுன் நகைகளையும் பறித்துள்ளார்.

மேலும் ரூபாய் 15 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அஜய்யின் டார்ச்சர் தாங்காத அம்மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்து, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பள்ளி மாணவியை மிரட்டி, தொடர்ந்து நகை, பணம் பறித்த அஜய் என்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி