முதலையிடம் சிக்கிய மூதாட்டி: நடந்தது என்ன?

2273பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுக்கஞ்சங்கொல்லை கிராமம் கொள்ளிட ஆற்றின் கரையோரத்தில் பெரும்பாலான மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். அதேபோல் வழக்கம்போல் நேற்று மாலை நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் மனைவி சின்னம்மா (70) என்பவர் மேய்ச்சலுக்காக தனது ஆடுகளை ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் இளைப்பாற கரையில் ஒதுங்கி படுத்திருந்த முதலை எதிர்பாராத விதமாக திடீரென மூதாட்டியின் காலை பிடித்து இழுத்து கடித்து குதறியது. இதில் அவருக்கு இடது கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து சத்தம் போட்டு கதறியுள்ளார்.. அப்போது அக்கம் பக்கத்தினர் சின்னம்மாவின் அலறல்சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை முதலையின் பிடியில் இருந்து பத்திரமாக மீட்டனர். முதலை கடித்ததில் அதே இடத்தில் மயங்கிய நிலையிலிருந்து மூதாட்டியை 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மூதாட்டியை முதலை கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி