அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கடைவீதியில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் விக்ரமபாண்டியன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை. எஸ். ராஜேந்திரன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு, இளநீர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், மாவட்டத் துணைச் செயலாளர் தங்கப்பிச்சமுத்து உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.