அண்ணா சொன்ன பதில்!

58பார்த்தது
அண்ணா சொன்ன பதில்!
தமிழ்நாடு அரசு பேருந்துகளிலெல்லாம் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெறச் செய்தார் அண்ணா. இதைக் கேலி செய்ய எண்ணி எதிர்க் கட்சி உறுப்பினர் ஒரு கேள்வியைக் கேட்டார். பேருந்தில் யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவா? இந்த கேள்விக்கு அண்ணா, நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்.

தொடர்புடைய செய்தி