11 வயது சிறுவன் பலி.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

74பார்த்தது
11 வயது சிறுவன் பலி.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி
சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தனது ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் சுகாதாரமற்றக் குடிநீரால் 10 பேர் பலியான நிலையில், தற்போது சென்னையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதைக் கூட ஒரு அரசால் உறுதிசெய்ய முடியவில்லை என்பது நிர்வாகச் சீர்கேடாகும்” என்றார்.

தொடர்புடைய செய்தி