சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா

51பார்த்தது
சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா
மதுரை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை சோழவந்தான் பூ மேட்டு தெரு கிராமத் தலைவர் மணி முத்தையா குடும்பத்தார் ஏற்பாட்டில் கோவிலில் இருந்து அம்மன் பூ மேட்டு தெரு கிராமத்தில் உள்ள ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் கோவில் மண்டபத்தில் சர்வ அலங்காரத்துடன் பொதுமக்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் இரவு 9 மணிக்கு மேல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஜெனகை மாரியம்மன் சப்பரத்துடன் ஊர்வலமாக வந்தனர். அதனைத் தொடர்ந்து பெண்கள் வைகை ஆற்றுக்கு சென்று முளைப்பாரி கரைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி