கொடுமைப்படுத்தியதாக புகார் - பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை

83994பார்த்தது
கொடுமைப்படுத்தியதாக புகார் - பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை
திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் தன்னை கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்த உளுந்தூர் பேட்டையை சேர்ந்த பெண்ணின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ, மருமகள் மெர்லின் ஆண்ட்ரோ மீது கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்த வீட்டுப் பணிப்பெண்ணின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள எம்எல்ஏவின் மகன், மருமகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். பணிப்பெண்ணை அடித்து கொடுமைப்படுத்தியதாக எம்எல்ஏ மகன், மருமகள் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டு வேலைக்கு கூட்டிச் சென்று பெண்ணை அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி