காங்கிரஸ் கட்சியின் மனக் கசப்பிற்கு அதிமுகவிடம் மருந்து உள்ளதாக அதிமுகவை சேர்ந்த வைகைச் செல்வன் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்வதில் தமிழக
அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில்,
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதிகளை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனால் காங்கிரஸுக்கான மருந்து அதிமுகவிடம் உள்ளது என வைகைச் செல்வன் அழைப்பு விடுத்துள்ளார்.