ரூ.40 செலுத்தினால் கிளாம்பாக்கத்தில் இருந்து எங்கும் செல்லலாம்

578பார்த்தது
ரூ.40 செலுத்தினால் கிளாம்பாக்கத்தில் இருந்து எங்கும் செல்லலாம்
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40 கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார். இத்திட்டம் நாளை முதல் (மார்ச் 01) செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி