நேரடியாக பாமகவை ஆதரிக்கப்பதற்காகவே விக்கரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், "விக்கரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு துரோகம் செய்திருக்கிறார். இடைத்தேர்தலை புறக்கணித்து வந்த பாமக தற்போது போட்டியிடுவதும், அதிமுக புறக்கணிப்பதும் அவர்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வை காட்டுகிறது. பாஜக- அதிமுகவின் கள்ள உறவை விக்கிரவாண்டி தொகுதி மக்கள் புரிந்து கொண்டு திமுகவுக்கு வாக்களிப்பது உறுதி" என கூறியுள்ளார்.