2014ல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசு, 2019ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது 2024 லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வேயில், மோடிக்குப் பிறகு மக்கள் யாரை பிரதமராகப் பார்க்க விரும்புகிறார்கள்? என்பது குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் பிரதமர் மோடிக்குப் பிறகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் 29 சதவீதம் பேரும் என 25 சதவீதம் பேர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அடுத்த பிரதமராக வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.