தர்பூசணியின் உள்புறம் நல்ல சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் ஆக்சிடாசின் செயற்கை ரசாயனங்களை சேர்க்கிறார்கள். இதனை சாப்பிடும் போது வயிற்று வலி, நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதனை கண்டுபிடிப்பது எப்படி? உற்று நோக்கினால் ஊசி போட்டதற்கான அடையாளம் தெரியும். பழத்தை டிஷ்யூ பேப்பரால் துடைக்க அதில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறம் இறங்கி இருந்தால் செயற்கையாக வண்ணம் சேர்க்கப்பட்டது என அறியலாம்.