வேலை கேட்டு வந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. (வீடியோ)

92842பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வேலை கேட்டு வந்த இளம்பெண் ஏமாற்றப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன், சீதாப்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள வெமார்ட் நிறுவனத்தில், முஸ்கான் என்ற இளம்பெண் வேலை கேட்டுச் சென்றுள்ளார். அங்கு, சசிகாந்த் என்ற இளைஞர், அப்பெண்ணின் பயோடேட்டாவில் இருந்து போன் எண்ணை எடுத்துக் கொண்டு, வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி உள்ளார். பின்னர் அப்பெண்ணை லாட்ஜ் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த இளைஞரின் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி