செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனால் கூடுவாஞ்சேரி நேற்று (மே 21) இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சரவணனை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.